Skip to content

ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேசனில் 71 கிலோ வௌ்ளிக்கட்டி பறிமுதல்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் மற்றும் செந்தில் ஆகிய இருவரும் ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாக்குளம் பகுதியில் இருந்து 79 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான 71 கிலோ வெள்ளி கட்டிகளை எடுத்துக்கொண்டு புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலம் நோக்கி சென்றனர். அப்போது ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் இறங்கி மற்றொரு ரயில் மூலம் சேலம் செல்ல காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் நிகில் குமார் குப்தா மற்றும் உதவி காவல் ஆய்வாளர் குமரேசன், தலைமை காவலர் பிரபு ஆகியோர் சந்தேகத்தின் பேரில் இருந்த மாதேஸ்வரன் மற்றும் செந்தில் ஆகியோர் வைத்துக் கொண்டிருந்த பேரை பரிசோதனை செய்தது ரசீது இல்லாமல் 71 கிலோ வெள்ளி கட்டிகள் இருப்பது தெரிய வந்தது இதனை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். அதன் பின்னர் வேலூர் வணிகவரித்துறை சுற்றும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் விரைந்து வந்த அதிகாரி சுகுமாரன் வெள்ளிக்கட்டிகளை சோதனை செய்தனர் அதன் பின்னர் அதற்கான தண்டத்தொகை ரூபாய் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறினர். தொகையை செலுத்திய பின்னர் 79 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிக்கட்டிகளை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். ரசீது இல்லாமல் கொண்டுவரப்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் 71 கிலோ வெள்ளிக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.
error: Content is protected !!