நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் சுற்றுச்சூழல் டிஜிட்டல் மூவர்ணக் கொடி ஏராளமானூர் கண்டு களித்தனர். நாடு சுதந்திரம் அடைந்து 79வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ள நிலையில் நாடு முழுவதிலும் விழாவை பிரமாண்டமாக கொண்டாட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாரம்பரிய சின்னங்கள் மற்றும் நினைவுச்
சின்னங்கள் மீது மூவர்ண கொடி மின்னும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தஞ்சை பெரிய கோவில் கங்கைகொண்ட சோழபுரம் திருமயம் கோட்டை உள்ளிட்ட இடங்களில் இந்திய தொல்லியல் துறை திருச்சி கோட்டத்தின் சார்பில் வண்ண மின்விளக்கு மூலம் தேசியக்கொடி பிரம்மாண்டமாக ஒளிரூட்டப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ நுழைவாயில் இடதுபுறம் மூவர்ண விளக்குகளால் தேசியக்கொடி அமைக்கப்பட்டுள்ளது ஏராளமானோர் கண்டு களித்ததோடு போட்டோவும் எடுத்துச் சென்றனர்.