கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள நெடுஞ்சாலையில் கர்நாடக பதிவெண் கொண்ட காரில் 5 பேர் பயணித்தனர். ஊத்தரங்கரை அருகே சென்றபோது சாலையில் எதிரே வந்த மற்றொரு கார் மீது இந்த கார் மோதியது. இந்த கோர விபத்தில் 2 கார்களிலும் பயணித்த 8 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…8 பேர் படுகாயம்

