Skip to content

மயிலாடுதுறை….2 இடங்களில் என்ஐஏ சோதனை

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இரு பிரிவுகளாக வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  மயிலாடுதுறை அடுத்த வடகரையை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மாவட்டசெயலாளர் நவாஸ் கான் மற்றும் தேரிழந்தூர் கிராமத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மாவட்ட தலைவர் முகமது பைசல்  ஆகியோர் வீடுகளில் சோதனை  நடத்தி வருகிறார்கள். பாப்புலர்  பிரண்ட் ஆப் இந்தியா தற்போது தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.

இன்று அதிகாலை முதல் தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது.  இரு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். என்.ஐ.ஏ டிஎஸ்பி சுசிலா தலைமையில் வடகரை நவாஸ்கான் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.  நவாஸ்கான் ஒரு மாதத்திற்கு முன் சிங்கப்பூர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!