Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி… கரூரில் தொடங்கியது

அறியப்படாத சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மக்கள் நல திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி கரூர் அரசு கலை கல்லூரியில் உள்ள கூட்டரங்கில் இன்று துவங்கியது. இந்த புகைப்படக் கண்காட்சி இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. புகைப்பட கண்காட்சியைத் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் சென்னை மத்திய மக்கள் தொடர்பு இயக்குநர் காமராஜ்,திருச்சி மத்திய மக்கள் தொடர்பக கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து விழா அரங்கில் வைக்கபட்டுள்ள சுகந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி மற்றும் மக்கள் நல திட்டங்களை பார்வையிட்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

மத்திய மக்கள் தொடர்பு இயக்குநர் காமராஜ் பேசுகையில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்து நாடு முழுவதும் சுதந்திர தின அமிர்த பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சிஅதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்துக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இந்த கண்காட்சி நடைபெற்றுள்ளது.இதனையடுத்து இன்று கரூரில் நடைபெறுகிறது
இந்த கண்காட்சியில் 30க்கும் மேற்பட்ட தலைவர்களின் புகைப்படங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியில் சுமார் 160க்கும் மேற்பட்ட படங்கள் இடம் பெற்றுள்ளது.
3 நாட்கள் கரூரில் நடைபெறும் இந்த கண்காட்சியைப் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் பார்த்துப் பயன்பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!