கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் கோமங்கலம் புதூர் பைபாஸ் சாலையில் வந்த விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பனிமனை சேர்ந்த TN 67 N 1548 பேருந்தின் ஓட்டுநர் அருள்மூர்த்தி என்பவர் பொள்ளாச்சி – சிவகாசி செல்லும் பேருந்தை மது போதையில் இயக்கினார். கோமங்கலம் புதூர்
டோல்கேட் அருகே பஸ்சை கட்டுப்படுத்த முடியாமல் ஓட்டியுள்ளார். இதையறிந்த அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் கூச்சலிட்ட பின்னர் பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து கோமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.