திருச்சியில் காரும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில், திருச்சி மாநகர கோட்டை காவல்நிலைய போக்குவரத்து பிரிவு காவல் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த திருக்குமார் என்பவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்தபோலீசார் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.