பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; கூரைநாடு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் மயிலாடுதுறை எம்எல்ஏ பங்கேற்பு:- நாடெங்கும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு
வருகிறது. மயிலாடுதுறையில் அனைத்து பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை தொடங்கி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கூறைநாடு பெரிய பள்ளிவாசல் அழைக்கப்படும் அல் ஜாமியாத்தூஸ் ஸாலிஹாத் பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாம் அப்துல் காதர் தாவூத் நடைபெற்ற தொழுகையில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அனைவரும் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். .