கரூரில் கனிமவளத் துறையை கொண்டு தற்காலிக ஓட்டுநர் அஜீத் குரியன் குவாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூல் ஈடுபட்டு வருவதாகவும்
உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பிரேம்நாத் மற்றும் கட்சி நிர்வாகிகள், தற்காலிக ஓட்டுநர் அஜீத் குரியன் குவாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூல் செய்து வருவதாகவும், குளித்தலையில் மதுபான கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
கரூர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பிரேம்நாத் அளித்த மனுவில் கூறியதாவது:
கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் தற்காலிக ஓட்டுநராக பணியாற்றும் கேரளாவை சேர்ந்த அஜித் குரியன் குவாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலித்து வருகிறார். மாமூல் கொடுக்காத குவாரிகள் மீது புவியல், சுரங்கத் துறை உதவி இயக்குநரை தூண்டிவிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுபோல முறைகேடாக சம்பாதித்த பணத்தின் மூலம் காந்திகிராமம் பகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட பங்களாவை கட்டி உள்ளார்.
எனவே ஆட்சியர் அவர்கள் இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி தற்காலிக ஓட்டுநர் அஜித் குரியனை பணிநீக்கம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலையில் கரூர் திருச்சி நெடுஞ்சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் செயல்படும் இந்த மதுபான கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. மது அருந்திவிட்டு பலர் சாலையில் தள்ளாடி செல்வதால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன எனவே அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.