Skip to content

பதவியிழந்த நகராட்சித்தலைவர் மீது வழக்குப்பதிவு

  • by Authour
தென்காசி மாவட்டம் , சங்கரன்கோவில் நகர் மன்றத் தலைவர் திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி. இவர், கடந்த 3 ஆண்டுகளாக நகர்மன்ற தலைவர் பதவியில் இருந்தாா. இவர்  ஒழுங்காக கூட்டங்களை நடத்தவில்லையாம். மேலும், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.  
அதன்படி, கடந்த ஜூலை 2-ம்தேதி நகராட்சி ஆணையர் முன்னிலையில் உறுப்பினர்களிடம் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், உமா மகேஸ்வரிக்கு எதிராக கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக 28 நகர்மன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், நகர்மன்ற தலைவர் பதவியை உமா மகேஸ்வரி இழந்ததாக அறிவிக்கப்பட்டது.இந்த தீர்மானத்துக்கு தடை விதிக்கக் கோரியும், இதில், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனவே, ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக்கோரி சங்கரன்கோவில் நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜூலை 17-ம் தேதி காலை 11 மணிக்கு வாக்குச் சீட்டு முறையில் ரகசிய வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நடத்த வேண்டும் என்றும், அதற்கான முடிவுகளை ஜூலை 18-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவின்படி,  நேற்று  ரகசிய வாக்கெடுப்புநடந்தது.

 11 மணிக்கு நடைபெற வேண்டிய வாக்கெடுப்பு ஏன் நடைபெற வில்லை என்று கூறி நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை, போலீசார் சமரசம் செய்ய முன்றனர். அப்போது, வாக்கு பெட்டிகளை நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி தள்ளி விட்டு ரகளையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் நேற்று வாக்கெடுப்பின்  போது உமாமகேஸ்வரி, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குப்பெட்டியை  தனது கைகளால் தள்ளிவிட்டார்.  இதுபற்றி போலீசில் புகார் செ்யப்பட்டது. போலீசார் உமா மகேஸ்வரி மீது 4 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

error: Content is protected !!