Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரசிகர் கொலை வழக்கு… கன்னட நடிகர் தர்ஷன் கைது

பெங்களூர் : கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, ரேணுகாசாமி கொலை வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அன்று வழங்கிய ஜாமீன் உத்தரவை இன்றைய தினம் ரத்து செய்து, உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கில், தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளியான நடிகை பவித்ரா கவுடா உட்பட பலர், தர்ஷனின் ரசிகரான 33 வயது ரேணுகாசாமியை கடத்தி, சித்திரவதை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ரேணுகாசாமி, பவித்ரா கவுடாவுக்கு சமூக வலைதளங்களில் ஆபாச செய்திகள் அனுப்பியதாக கூறப்படுகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு, உயர் நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவு “கடுமையான சட்ட குறைபாடுகளை” கொண்டிருப்பதாகவும், சாட்சிகளை பாதிக்கக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் கூறி, ஜாமீனை ரத்து செய்தது.

முன்னதாக, இந்த வழக்கில் அவர்கள் உள்பட 17 பேர் கைதாகி இருந்தனர். தர்ஷன், பவித்ரா உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் ஜாமின் வழங்கியதால் அவர்கள் விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில், ஜாமினை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது, மேலும் இந்த வழக்கு கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!