தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பள்ளியூர் கிராமத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால் கம்பிகள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவில் மோசமாக காட்சியளிக்கிறது..
இரண்டு சக்கர வாகனங்களில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகும்..
மேலும் பள்ளியூரில் காணப்படும் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் வராமல், கிராம பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டி எவ்வித பலனும் அளிக்காமல் காட்சியளிப்பதாகவும்… மழை காலம் தொடங்கும் முன்னரே குண்டும் குழியுமாக காணப்படும் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். கிராம பொதுமக்களுக்கு பயனளிக்காமல் காணப்படும் நீர் தேய்க்க தொட்டியில் தண்ணீரை சேமித்து குழாய்களில் தண்ணீர் வருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்