திருச்சியில் மாம்பழச்சாலை அருகே காவிரி ஆற்றுக்குள்ளே இறங்கி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 60 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கல்வி கடன், விவசாய கடன், தள்ளுபடி
செய்யப்பட வேண்டும். காவிரி ஆற்றின் உபரி நீரை ஐயாற்றில் திருப்பி விட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.