Skip to content

திருச்சியில் 2 வீடுகளில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு..

திருச்சி கருமண்டபம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் மாணிக்கராஜ் இவரது மனைவி ஜெயந்தி (வயது 49) இவர் கருமண்டபம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு ஆல்பா நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் வீட்டின் இரும்பு கதவின் பூட்டை உடைத்து மர்ம
ஆசாமிகள் உள்ளே புகுந்து இரும்பு கேட் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அறையில் வீட்டின்கதவையும் உடைத்து உள்ளே சென்று அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 8 பவுன் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.பிறகு வீட்டிற்கு வந்து பார்த்த ஜெயந்தி அதிர்ச்சி அடைந்து உடனடியாக செசன்ஸ் கோர்ட் போலீசா இருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர். இதே போன்று திருச்சி புத்தூர் லாவண்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 70)இவர் கடந்த 15ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் அவரது உறவினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்
தார்.இதையடுத்து உடனடியாக அவர் சென்னையில் உள்ள ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தார். பிறகு ராஜேந்திரன் திருச்சிக்கு விரைந்து வந்து வீட்டுக்கு சென்று பார்த்த பொழுது வீட்டின் அறையில்உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து வெள்ளிப் பொருட்கள் மற்றும் லேப்டாப் ஹார்ட் டிஸ்க் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது இந்த கொள்ளை சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளி பொருட்களை தேடி சென்ற மர்ம ஆசாமிகளை வீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!