கோயமுத்தூரில் நாளை 25ம் தேதி செம்மொழி பூங்கா திறப்பு விழாவிற்கு வருகை தரும் தமிழக முதல்வரை வரவேற்கும் விதமாக செம்மொழிப் பூங்காவே வருக என்ற வகையில் விதைகளை செம்மண்ணில் பதித்து முதல்வரின் முழு உருவத்தை ஒரு ஓவியமாக வரைந்துள்ளேன். இந்த ஓவியத்தை ஒரு வாரம் காலமெடுத்து விதைகளை கொஞ்சம் கொஞ்சமாக வளரவிட்டு முதல்வர் வருகை தினத்தில் அவருக்கு அன்பு பரிசாக வரவேற்கும் விதமாக உருவாக்கியுள்ளேன். இந்த ஓவியத்தில் முதலில் செம்மண்ணில் அமைத்து பிறகு உருவத்தி

ன் மேல் விதைகளை வரிசைப்படுத்தி அடுக்கி முதல்வரின் முழு உருவத்தை உருவாக்கியுள்ளேன். இதில் தினமும் தண்ணீரும் இதமான வெயிலும் வைத்து எடுத்து பதப்படுத்தி செடிகளை வளர்த்தியுள்ளேன். இதற்கு செம்மொழிப் பூங்காவே வருக என்ற தலைப்பு வைத்துள்ளேன்.

