Skip to content

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் நிலவும் புதிய வானிலை மாற்றங்கள் காரணமாகத் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மேகமூட்டமும், மழையும் நீடிக்கிறது. இந்தச் சுழற்சியின் நகர்வு காரணமாக ஈரப்பதம் மிக்க காற்றுக் கடலோரப் பகுதிகளில் இருந்து உள் மாவட்டங்களுக்கு நகர்வதால் மழைப் பொழிவு அதிகரித்துள்ளது.

இன்று (டிசம்பர் 17) காலை முதலே வளிமண்டல சுழற்சியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், கீழ்க்கண்ட 7 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி இந்தப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றும், இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்னையைப் பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை வழக்கத்தை விடக் சற்று குறைவாகவே இருக்கும். புறநகர்ப் பகுதிகளில் இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

error: Content is protected !!