Skip to content

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகம், புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது தமிழக மீனவர்கள் அநியாயமாக கைது செய்யப்படுவது வழக்கம். அது போல் அவர்களது படகுகளை சேதப்படுத்துவது, வலைகளை அறுப்பது உள்ளிட்ட செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குச் சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். மேலும், அவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். நெடுந்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமில் வைத்து இலங்கை படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொண்டு வரும் அத்து மீறல்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!