Skip to content

பெரம்பலூர்- போலீஸ் வாகனம் மீது நாட்டுவெடிகுண்டு வீச்சு-2 காவலர்கள் காயம்

பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதில் காவலர்கள் விக்னேஷ்குமார், மாரிமுத்து பாண்டி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் 2 பேர் புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
மதுரையில் பழிக்குப் பழியாக 22 ஆண்டுகளில் 21 கொலைகள் நடந்த நிலையில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ரவுடி வௌ்ளை காளி மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!