Skip to content

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழா நாளை (ஜனவரி 28, புதன்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவிலின் கும்பாபிஷேக விழாவில், நாளை லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளைக் கருத்தில் கொண்டு, நாளை ஒரு நாள் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!