ராஜஸ்தானின் ஆல்வார் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர், வரதட்சணையை வாங்க மறுத்து கவனம் ஈர்த்துள்ளார். அவரின் திருமண நாளில் மணப்பெண்ணின் தந்தை வரதட்சணையாக ₹31 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். இதை மறுத்த இளைஞரும் அவரின் தந்தையும், உங்கள் பெண்ணை கொடுத்ததே பெரிய பரிசு தான் எனக்கூறி அடையாளத்துக்காக ₹1 ரூபாய், ஒரு தேங்காய் மட்டும் பெற்றுக்கொண்டனர். இந்த இளைஞரை பாராட்டலாமே?

