தன்னை பற்றி கண்ணியக்குறைவாக பேசியதற்கு திரிஷா கண்டனம் தெரிவித்தநிலையில் நயினார் வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை.. வாய் தவறி அந்த வார்த்தை வந்து விட்டது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் வருத்தம் தெரிவித்தார். அவர் பேட்டியில் கூறியதாவது.. யார் மனதும் புண்படும் விதத்தில் பேசியிருந்தால் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். வாய் தவறி அந்த வார்த்தை வந்து விட்டது. திரிஷா பற்றி பேசியதற்காக வானதி சீனிவாசன், அண்ணாமலை உள்ளிட்டோர் என்னிடம் பேசினர். என்று இவ்வாறு தெரிவித்தார்.

