திருச்சி கூட்டுறவுத்துறை அமராவதி சூப்பர் மார்க்கெட்டில் நடைபெறும் பணியாளர் விரோத போக்கை கண்டித்து, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

