ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 30 மாணவர்கள் காயம் அடைந்தனர். காலையில் 30 மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்ற வாசன் மெட்ரிகுலேசன் பள்ளி வாகனம் மீது லாரி மோதியதில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்த 30 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

