ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருவதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேற்கு ஆசியாவில் அமைதி, வளர்ச்சி பரவ வேண்டும் என ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து கூறினார். கப்பல் போக்குவரத்துக்கான வழித்தட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஈரான் அதிபரிடம் வலியுறுத்தினார்.

