Skip to content

அதிமுக பொதுக்குழு வழக்கு….17ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நாங்கள் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் எம்.எல்.ஏவும் வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்விசாரணைக்கு  வந்தது.

பொதுக்குழு தீர்மானத்தால் நாங்கள் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று  மனோஜ்பாண்டியன் தரப்பினர் வாதிட்டனர்.

எடப்பாடி உள்ளிட்ட எதிர்தரப்பினரிடம் விளக்கம் கேட்க வேண்டியது உள்ளது. விளக்கம் கேட்காமல் தடை விதிக்க முடியாது என கூறி வழக்கை வரும் 17ம் தேதிக்கு நீதிபதி  தள்ளிவைத்தார்.  வழக்கு விசாரணைக்கு வருவதற்கு  2 தினங்களுக்கு முன்னர்  எடப்பாடி தரப்பினர் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!