Skip to content

சமயபுரம் கோவிலில் சித்திரை தேரோட்டம்…அம்மன் சேஷ வாகனத்தில் திருவீதி உலா..

  • by Authour

 

தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் தேரோட்ட விழாவை முன்னிட்டு கடந்த 9 ந்தேதி கோயில் உள் பிரகாரத்தில் உள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்ற விழா நடைபெற்றது.
ஒவ்வொருநாளும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். வருகின்ற 17-ந்தேதி

அம்மன் வெள்ளிகுதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் விழா வருகின்ற 18-ந்தேதி காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதனைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில் சித்திரைத் தேரோட்ட விழாவில் 7 ம் நாளில் வசந்த மண்டபத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.இதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாதரனை நடைபெற்றது.பின்னர் அம்மன் சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரம் மற்றும் தேரோடும் வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள்கள் ,
பக்தர்கள் செய்து வருகின்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!