Skip to content

திருச்சியில் இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஆசிரியை ஓட்டம் ..

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோம்பைபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ்.

இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நதியா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். நதியா நர்சிங் முடித்துள்ளார் தற்போது துறையூர் அருகே உள்ள கோம்பைபுதூரில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றினார்.

இந்நிலையில் நதியா அதிக நேரம் செல்போனில் பொழுதைக் கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் இன்ஸ்டாகிராமில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த நவீன் என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக திடீரென நதியாவை காணவில்லை. அதனால் இன்ஸ்டாகிராம் காதலன் நவீனுடன் அவருடன் சென்றிருக்கலாம் என கணவர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலனுடன் ஓடிய அரசுப் பள்ளி தற்காலிக ஆசிரியை நதியாவை தொலைபேசி எண்ணைக் துறையூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த பள்ளி ஆசிரியை வேறொரு நபருடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!