Skip to content

கரூர் ஆதி மாரியம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்து, அழகு குத்தி நேர்த்திக்கடன்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்க கேட் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மாரியம்மன் திருவிழா கம்பம் போடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது அதைத்தொடர்ந்து நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வரும் நிலையில் இன்று அமராவதி ஆற்றில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டி ,பால்குடம் அலகு உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை செய்தனர்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து தாரை தப்பட்டைகள் முழங்க ஏராளமான பெண் பக்தர்கள் மற்றும் மஞ்சள் உடை அணிந்து முக்கிய வீதிகள் வழியாக தங்களது அக்னி சட்டி நெத்திக்கடனை செய்தனர் அதைத்தொடர்ந்து பக்தர்கள்

பிரம்மாண்ட கழுகு வாகனத்தில் அழகு குத்திக் கொண்டும் ஆலயம் வருகை தந்தனர் தொடர்ந்து ஆதி மாரியம்மன் ஆலயத்தில் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஆதி மாரியம்மன் திருவிழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து நாளையும் அமராவதி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனை செய்ய இருக்கின்றனர் மேலும் நாளை மறுதினம் மாரியம்மன் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியை முன்னிட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!