Skip to content

திமுக, பாஜக விமர்சனத்துக்கு உடனடி பதில்….ஐ.டி. விங்க் நிர்வாகிகளுக்கு எடப்பாடி உத்தரவு

  • by Authour

அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது. “மக்களவை தேர்தல் 2024-ன் போகஸ்” என்கிற தலைப்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன் உள்பட ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி  பேசியதாவது:அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு  நாம் வெற்றி பெறும் வகையில் செயலாற்ற வேண்டும் . அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க.  பாஜக உள்ளிட்ட மற்ற  கட்சிகள் சமூக வலைதளங்களில் போடும் ‘மீம்ஸ்’ மற்றும் பதிவுகளுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரமாக செயல்படவேண்டும். அதே நேரத்தில் கண்ணியத்துடன்  செயலாற்ற வேண்டும்.  இந்த பிரிவை நானே நேரடியாக கண்காணிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!