Skip to content

நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி முகாம்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைப்படி  பொதுமக்களுக்கு நடை பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக எட்டு கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி மேற்கொள்ள சிறப்பு நடை பயிற்சி முகாம் துவக்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கி நகரின் முக்கிய பகுதி வழியாக நடைபெற்று வருகின்றது. அதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தலின்படி இன்று நடைபெற்ற முகாமினை  அரியலூர் மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மருத்துவர். அஜிதா துவக்கி

வைத்தார். இம்முகாமில் ஏராளமான அரசு அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். நடைபயிற்சி பாதையின் இடையிடையே இளைப்பாறும் இடம் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. முகாம் துவங்கும் இடத்தில் அரியலூர் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகா தலைமையிலான மருத்துவ குழுவினர், நடைபயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு குறித்து மருத்துவபரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!