Skip to content

கேஸ் சிலிண்டர் விலை 30 ரூபாய் குறைப்பு….

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

அதன்படி கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 23.50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 1,960.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேவேளை, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை. இதனால், சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.918.50 விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மகிழ்ச்சி செய்தியாக இன்று வணிக சிலிண்டர் விலையை ரூ. 30.50 குறைந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. வணிக சிலிண்டர் விலை ரூ.1,960.50-ல் இருந்து ரூ. 30.50 குறைக்கப்பட்டு ரூ.1,930 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் வீட்டு உபயோக சிலிண்டர்  விலை மாற்றம் ஏதுமின்றி தொடர்ந்து ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் 918.50-க்கு விற்பனையான விட்டு உபயோக சிலிண்டர், மகளிர் தினத்தை முன்னிட்டு 100 ரூபாய் குறைத்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ. 818.50-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!