2024 -25 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திருச்சி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 150 பேர் தேர்வு எழுதினார்கள் . இதில் 147 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98 ஆகும். பள்ளி அளவில் முதல் மதிப்பெண் R. ௫த்ரா 550, இரண்டாம் மதிப்பெண் R. கவிதா, 538 மூன்றாம் மதிப்பெண் B .ஜீவிதா மற்றும் R. மகாலட்சுமி 525 பெற்றுள்ளனர். தாவரவியல் பாடத்தில் இரண்டு மாணவிகள் 100 மதிப்பெண்ணும் புள்ளியியல் பாடத்தில் ஒரு மாணவி 100 மதிப்பெண்ணும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். தாளாளர்
அருள் முனைவர் S .கஸ்பர் அடிகளார் தலைமையாசிரியர் அருட்திரு L.இராபர்ட் செல்வன் அடிகளார் மற்றும் இருபால் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகளை வாழ்த்தினார்கள்.
