மயிலாடுதுறை அருகே நீடூர் முகமது ஹாலிக் (36) என்பவரை ஏ எம் எச் திருமண மண்டபத்திற்கு எதிரில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி பட்டக்கத்தியால் சரமாரியாக வெட்டியதில் படுகாயமடைந்தவரை கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்திருந்தனர். இன்று விடியற் காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறையில் ஓட ஓட விரட்டி ஒருவர் கொலை.. பரபரப்பு சம்பவம்
- by Authour
