Skip to content

திருச்சியில் வீட்டருகே விளையாடிய சிறுவன் வாய்க்காலில் சடலமாக மீட்பு

திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு, குடித்தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மகன் தமிழ்இனியன் (3). வியாழக்கிழமை வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை காணவில்லை. அன்று மாலை வரை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் காணவில்லை. மேலும் அருகில் உள்ள புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் அதிகளவில் தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பதால், அதில் விழுந்திருக்கலாம் என தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் தேடியும் சிறுவனைக் காணவில்லை. இதனையடுத்து பொதுப்பணித்துறையினரின் உதவியுடன், வெள்ளிக்கிழமை, கட்டளை மேட்டு வாய்க்காலில் சென்ற தண்ணீரை நிறுத்திவிட்டு வாய்க்காலில் தேடியபோது, சிறிது தொலைவில் சிறுவன் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து நிகழ்விடம் சென்ற ராம்ஜீநகர் போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரதேப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை விபத்தில் முதியவர் சாவு 

திருச்சியில் சாலையை கடக்க முயன்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வெள்ளிக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
திருச்சி, காட்டூர் காவிரி நகர் 2 ஆவது தெருவை சேர்ந்தவர் ராபர்ட் (65) .இவர் வெள்ளிக்கிழமை இரவு திருச்சி } தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர் பிலோமினாள் சர்ச் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே திருச்சியில் இருந்து திருவெறும்பூர் நோக்கிச் சென்ற இரு சக்கர வாகனம் எதிர் பாராத விதமாக அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ராபர்ட் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார், நிகழ்விடம் சென்றுசடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ராபர்ட் மீது மோதிவிட்டு தப்பிச்சென்ற இருசக்கர வாகனம் குறித்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!