ராஜஸ்தானில் நிகழ்ந்த இந்த சம்பவம் பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீடு திரும்பிய பெண் ஒருவர், கேட்டை திறக்கும்போது அவர் கையில் இருந்த பை நழுவி அங்கே படுத்திருந்த நாய் மீது விழுந்தது. இதனால், ஆத்திரமடைந்த தெருநாய்கள் ஒன்றுகூடி அப்பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கின. அவர் கீழே விழுந்து, வலியால் அலறித் துடித்த நிலையில், ஸ்கூட்டரில் வந்தவர் நாய்களை விரட்டி விட்டு அப்பெண்ணை காப்பாற்றினார்.

