ரயில்வே நிர்வாகம், ஐஆர்சிடிசி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஏற்கனவே இந்த விதிமுறை அமலில் உள்ள நிலையில், ஜனவரி 12 முதல் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படுகிறது. டிசம்பர் 29 முதல் நேரக் கட்டுப்பாடுகளுடன் ஆதார் இணைப்பு சரிபார்க்கப்படும். ஜனவரி 12 முதல், ஆதார் இணைத்தவர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

