Skip to content

திருச்சியில் தமிழ் உணவு திருவிழாவில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி

கல்தோன்றி மணி தோன்றாக் காலத்தே, முன்தோன்றி மூத்தக்குடி தமிழ் குடி, அவ்வாறு பெயர் பெற்ற நம் பண்டைய தமிழரின் உண்மையான நீர் ஆகாரம், கம்மங் கூல், கேப்பக் கூல், கொளுக்கட்டை, தேனும் தினைமாவு உருண்டை, வரகு அரிசி வடை, சாமை பொங்கல், சோள பணியாரம், கருப்பு கவுலி பாயாரம், சிகப்பு அரிசி புட்டு மற்றும் இன்றைய கால பிரசித்தி பெற்ற உணவான ஆம்பூர் மட்டன் பிரியாணி, காரைக்குடி சிக்கன் குருமா. சிதம்பரம் இறால் சுக்கா, குற்றாலம் சிக்கள் வறுவல், புதுக்கோட்டை முட்டை மாஸ், இராமேஸ்வரம் மீன் குழம்பு மற்றும் இனிப்பு வகைகள், கார வகைகள் உள்ளடக்கிய மதிய உணவு மற்றும் இரவு உணவின் ருசியின்மை தனியானது.. கலையானது.

எஸ்.ஆர்.எம் ஹோட்டலின் மாஸ்டர் செஃப் P. இராஜசிவநேசன், செ.ப் சீனிவாசன் மற்றும் சக சமையல் கலைஞர்கள் குழுவாக சேர்ந்து இந்த தமிழ் உணவின் சுவைகளுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்குவதற்காக வேலை செய்கிறார்கள். இந்த உணவுத் திருவிழா தமிழ்நாட்டின் ஏராளமான மாவட்டத்தில் இருந்து பிராந்திய பிரசித்தி பெற்ற உணவுகளின் சுவைகளை நீங்கள் உள்ளூரிலே, கலைக்கும் வகையில் அமைந்துள்ளது.

சொகுசு மற்றும் சேவைக்கு பெயர்பெற்ற எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் உள்ள தி தக்ஷின் நக்ஷத்திரா ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரண்ட், உங்கள் மனதிலும் நாவிலும் நல்ல ரசனையை தூண்டும் ஒரு வகையான அனுபவத்தை ஏற்பாடு செய்கிறது. “தி தகஷின் நக்ஷத்திரா” ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரெண்ட்”

அதன் விருந்தினர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தி மெனுவில் பல்வேறு ஊரும். உணவும். வகைகளின் கலவையை, ஒரே இடத்தில் வழங்குகிறது. ஒவ்வொரு உணலின் சுவையும், ரசனை மொட்டுக்களை தூண்டுகிறது மற்றும் ஆவலைத் தாண்டும் வகையில் தரம் மறக்க முடியாத நினைவலைகளை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

உங்களை ஈர்க்கக் கூடிய மற்றும் நேரக்கத்துடன் தயாரிப்பது மட்டும் இல்லாமல், தனிப்பயனாக்கப்பட்ட உணவு அனுபவத்தை உருவாக்கும் நோக்கத்துடன் “தக்ஷின் நக்ஷத்திரா” வழங்குகிறது. மட்டுமல்லாது தயாரிப்பதோடு உணவை விருந்தினர்களுக்கு விளக்க காட்சியை பற்றி விவரிப்பதில் சமையல் கலைஞர்கள் பெருமை கொள்கிறார்கள். இந்த உணவும் ஹேட்டல் லாபி மட்டத்தில் 80 கவர்கள் இருக்கை வசதியுடன் அமைந்துள்ளது. எஸ்.ஆர்.எம் ஹோட்டல் பொது மேலாளர் பிரதீப் கிருஷ்ணா விவரிக்கும்போது “இத்திருவிழா” கொண்டாட உங்களுக்கு உதவும் வகையில் உணவுப் பொருட்கள். அலங்காரம் ஊழியர்களின் உடைகள் மற்றும் இசை ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு சுவைகளுடன் சங்கமம் செய்து. ஒரு தெய்வீக உணவு சுவைகளை அளிக்கிறது.

நிஜமான பழங்கால தமிழ் உணவு எங்கள் விருந்தினர்கள் சுவையை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக தயாரிக்கப்பட்ட உணவுக்கான அனைத்து பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள், திருச்சி மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கொண்டுவரப்படுகிறது. திருச்சி எஸ்.ஆர்.எம். தனியார் ஹோட்டலில் தமிழ் உணவு திருவிழா ஜூன் 27-ந் தேதி முதல் ஜூலை 6-ந் தேதி வரை நடக்கிறது. இந்த உணவு திருவிழாவில் நடிகரும் இயக்குனர் ஆன சமுத்திரகனி கலந்து கொண்டு பார்வையிட்டதோடு உணவினை சாப்பிட்டு ருசித்தார்.

error: Content is protected !!