Skip to content

ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து ஓட்டம் பிடித்த அதிமுக வேட்பாளர்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். 5-வது சுற்று முடிவிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 26 ஆயிரம் வாக்குகள் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்திலும் தேமுதிக 4-வது இடத்திலும் உள்ளது.

வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரிக்கு  அதிமுக வேட்பாளர் தென்னரசு வந்திருந்தார். 4 சுற்றுகள் எண்ணி முடித்தபோது தொடர்ந்து அவர் பின்னடைவையே சந்தித்து வந்தார். இதனால் அவர் அங்கிருந்து வெளியேறி காரில் புறப்பட்டு சென்றார். செல்லும் போது செய்தியாளர்கள் சந்திப்பில், “ஜனநாயகத்திற்கு மதிப்பில்லை, பணநாயகம் வென்று விட்டது” என்று கூறிவிட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!