கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மொத்த கொள்ளளவு 120 அடி தற்பொழுது 110 அடியை எட்டி உள்ளதால் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது,தண்ணீர் வரத்து 1861கன அடி,அணையில் தண்ணீர் தேக்கி வைத்திருப்பது 3224 கன அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 3864.61 கன அடி அணை ஆகும் அணையிலிருந்து தண்ணீர் எப்பொழுது வேண்டுமானாலும் ஆற்றில் வெளியேற்றப்படும் என்பதால் ஆற்றின்
கரையோரம் உள்ள பொதுமக்கள் துணி துவைக்கவும் ஆற்றில் குளிப்பதற்காகவும் செல்வதை தவிர்க்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர் கடந்த ஆண்டு தொடர் மழை காரணமாக ஆழியார் அணையில் 1580 – 92 கன அடி இருந்தது மேலும் வால்பாறை அருகே உள்ள சோலையார் அணை மூன்றாம் நாளாக நிரம்பி உள்ளதால் மூன்று மதங்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.