கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆற்றல் அசோக்குமாரின் மனைவி கருணாம்பிகை, உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மகளான இவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
