Skip to content
Home » நிறுத்தி வைக்கப்பட்ட 18 பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவு

நிறுத்தி வைக்கப்பட்ட 18 பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியாகி இருந்தது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் சில கல்வி நிறுவனங்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.. குறிப்பாக அண்ணா பல்கலைகழக கல்லூரிகளில் விடைத்தாள் திருத்தும் பணியில் கலந்து கொள்ளாத தனியார் பொறியியல் கல்லூரிகள், விடைத்தாள் திருத்த வழங்கப்படும் நிதி குறித்த கணக்குகளை ஒப்படைக்காத பொறியியல் கல்லூரிகள்,  மாணவர்களிடம் பெறப்பட்ட தேர்வு கட்டணங்களை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்காத கல்லூரிகள் ஆகியவற்றின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக் கழக தரப்பில் கூறப்பட்டது.  இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட 18 சுயநிதி கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை இன்றே வெளியிட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!