Skip to content

திருச்சி காங். கலைப்பிரிவு தலைவராக அருள் நியமனம்…

தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவின் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவராக இருந்த J.ராகவேந்திரா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த S.J.அர்ஜுன் ஆகிய இருவரும் அவரவர் வகித்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர் மாவட்ட கலைப்பிரிவு தலைவராக, திருச்சி, காட்டூரைச் சேர்ந்த .A.அருள் (தொடர்பு எண்: 9994319952), தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்.கு.செல்வப்பெருந்தகை  ஒப்புதலோடு நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டம், தொகுதி மற்றும் வார்டு அளவிலான கலைப்பிரிவு நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.

இந்த தகவலை தமிழ்நாடு காங்கிரஸ்  கலைப்பிரிவு மாநில தலைவர்  சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!