Skip to content

அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு….

அரியலூர் மாவட்ட அரசு அறிவியல் கலை கல்லூரியில் இன்று நாட்டு நலப்பணித் திட்டம் குறித்து கல்லூரி சார்பில் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் குணமதி மற்றும் உதவி ஆய்வாளர் தமிழரசன், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சாலை போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகள் குறித்தும், குழந்தைகள் & பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் தமிழக காவல்துறையின் காவல் உதவி செயலி குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு இலவச உதவி எண்கள் 1098 & 181 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!