அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், எறவாங்குடி மதுரா மாதாபுரம் கிராமத்தில் எதிர்வரும் 30.05.2025 அன்று ஜல்லிகட்டு நிகழ்வானது அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படவுள்ளது. மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுகளுக்கான பதிவுகள், மாடுபிடி வீரர்களுக்கான பதிவுகள் மற்றும் மாட்டின் உரிமையாளருக்கான பதிவுகள் ஆகிய அனைத்தும் https://ariyalur.nic.in என்ற இணையதளம் மூலமே பதிவுகள் செய்யப்பட வேண்டும். இவ்வாறு தங்களது பதிவுகளை எதிர்வரும் 23.05.2025 தேதி காலை 10.00 மணி முதல் 24.05.2025 தேதி மாலை 05.00 மணி முடிய பதிவுகளை மேற்கொள்ளலாம்.
ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் எறவாங்குடி மதுரா மாதாபுரம் கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மேற்படி இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் சமர்ப்பித்த விபர ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே மேற்படி ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இதையல்லாது தனிநபர்கள் மற்றும் வேறுவகையில் பெறப்பட்ட டோக்கன்கள் அனுமதிக்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.