அரியலூர், அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில்
462 மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள்,
நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.
அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் 462 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (02.06.2025) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்துகொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றையதினம் சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 462 மாணவ. மாணவிகளுக்கு 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி இன்றையதினம் வழங்கினார். மேலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 1,32,155 எண்ணிக்கையிலான பாட நூல்கள் மற்றும் 95,086 எண்ணிக்கையிலான பாடக்குறிப்பேடுகள் மற்றும் 64,610 எண்ணிக்கையிலான சீருடைகளும், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு காலேந்தி (ம) காலுறை 34,448 எண்ணிக்கையிலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு 48,168 எண்ணிக்கையில் புத்தக பைகளும், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு 13,966 எண்ணிக்கையிலான கணித உபகரணப் பெட்டிகளும், 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 5,462 எண்ணிக்கையிலான வரைபட நூல்களும் வரப்பெற்று பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை பள்ளி மாணவ, மாணவிகள் நல்ல முறையில் முழுமையாக பயன்படுத்தி உயர்கல்வி பெறும் வகையில் தங்களது திறமைகளை மேம்படுத்தி கொள்ளவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார்.
பின்னர், புதிய பாடநூல்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் கிடைக்கப்பெற்ற மாணவி சா.தமிழினி தெரிவிக்கையில், நான் கயர்லாபாத் கிராமத்திலிருந்து வருகின்றேன். நான் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு முடித்து 12ஆம் வகுப்பு செல்கிறேன். பள்ளியின் முதல் நாள் எங்களுக்கு புத்தகங்கள், பாடக்குறிப்பேடுகள் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமியால் வழங்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் முதல் தினமே வழங்கப்பட்டுள்ளதால் என்னால் தேர்வுக்கு தயாராவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. புத்தகங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது மிகவும் புத்துணர்ச்சியாக உள்ளது. புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி என மாணவி சா.தமிழினி தெரிவித்தார்.
இதேபோன்று மாணவன் கா.அப்துல் ரகுமான் என்பவர் தெரிவிக்கையில், நான் அஸ்தினாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். எனக்கு பள்ளி துவங்கிய முதல் நாளன்று புதிய புத்தகங்கள், பாடக்குறிப்பேடுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்வுக்கு நீண்ட நாட்கள் இருப்பதால் தற்போது வழங்கப்பட்டுள்ள புத்தகங்களைகொண்டு தேர்வுக்கு திட்டமிட்டு தயாராக முடியும். தேர்வினை எதிர்கொள்வதும் மிகவும் எளிதாக இருக்கும். புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி என மாணவன் கா.அப்துல் ரகுமான் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) பாலசுப்ரமணியன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கௌசர், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரிய கழகத்தினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
