Skip to content

தமிழறிஞர்களுக்கு விருதுகள் அறிவிப்பு…முழு லிஸ்ட்….

  • by Authour

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  அந்த வகையில்  2023ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகள் வழங்குகிறார்.

விருது பெறுபவர்கள் விவரம்: திருவள்ளுவர் விருது – நா.கு. இரணியன் பொன்னுசாமி, பேரறிஞர் அண்ணா விருது – உபயதுல்லா, பெருந்தலைவர் காமராஜர் விருது – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மகாகவி பாரதியார் விருது – டாக்டர் இ.ரா. வேங்கடாசலபதி, பாவேந்தர் பாரதிதாசன் விருது – வாலாஜா வல்லவன், திரு.வி.க விருது – நாமக்கல் பொ.வேல்சாமி, பெரியார் விருது – கவிஞர் கலி.பூங்குன்றன், கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது – கவிஞர் மு.மேத்தா, அம்பேத்கர் விருது – எஸ்.வி.ராஜதுரை, தேவநேயப் பாவாணர் விருது – முனைவர் இரா. மதிவாணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!