பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஆனாலும் ஒரு பிரிவினர் இன்றே கொண்டாடுகிறார்கள். கோவையில் ஜாக் பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று சிறப்பு தொழுகை நடத்தினர்.
கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் வளாகத்தில் ஜாக் அமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரகணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
இந்த தொழுகையின் போது இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ,
ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இறை தூதர் இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூர்ந்து ஆடு,மாடு ஆகியவற்றை பலியிட்டு அவற்றை 3 பங்காக பிரித்து அதில் ஒரு பங்கை நண்பர்களுக்கும்,
மற்றொரு பங்கை ஏழைகளுக்கும், 3-வது பங்கை தங்களுக்கும் பகிர்ந்து உற்சாகமாக பக்ரீத் பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர்.
