பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இது குறித்து கர்நாடக அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று கர்நாடக ஐகோர்ட்டும் தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அறிக்கையை கேட்ட ஐகோர்ட், இது குறித்து பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணை மேற்கொள்ள இருக்கிறது.