கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி. விங்க் தலைவராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ஜெய்குமார், முதல்வர் மு.க. ஸ்டாலின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இது குறித்து நெல்லை திமுகவினர் போலீசில் புகார் செய்திருந்தனர். இந்த புகாரின் பேரில் ஜெய்குமார் கைது செய்யப்பட்டார்.