நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த கவலைகள் இருக்கும் நிலையில் வங்கதேசத்திற்கு 5000 டன் டீசல் வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 1,80,000 டன் டீசல் இந்தியா அனுப்ப வேண்டும், அதில் ஒரு பகுதியே இந்த 5000 டன் டீசல் ஆகும். மேலும் அடுத்த 6 மாதங்களில் 90,000 டன் டீசல் பெற உள்ளதாக வங்கதேச அரசு விளக்கம் அளித்துள்ளது.

